நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் தங்கதுரை மகள் வனிதா, 20; பி.எஸ்சி., நர்சிங் படித்துள்ளார். கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர், கடந்த 21ம் தேதி வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.