/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவிக்கு டார்ச்சர் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
பள்ளி மாணவிக்கு டார்ச்சர் 'போக்சோ'வில் வாலிபர் கைது
பள்ளி மாணவிக்கு டார்ச்சர் 'போக்சோ'வில் வாலிபர் கைது
பள்ளி மாணவிக்கு டார்ச்சர் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : ஜூன் 15, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி,; பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மேல்மலையனுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவர், கடந்த 10ம் தேதி பள்ளிக்கு வந்த போது, பின் தொடர்ந்து வந்த மேலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ஆதிகேசவன் 22; வழி மறித்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்து, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து ஆதிகேசவனை கைது செய்தனர்.