நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் :பஸ் நிலையத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்த வாலிபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த விஜயன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம், 33; இவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சென்னை பஸ்கள் நிறுத்தும் பகுதியில், கடந்த 23ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.