sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஓட்டு எண்ணும் பணியில் 360 அலுவலர்கள்  முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையில் தேர்வு

/

ஓட்டு எண்ணும் பணியில் 360 அலுவலர்கள்  முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையில் தேர்வு

ஓட்டு எண்ணும் பணியில் 360 அலுவலர்கள்  முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையில் தேர்வு

ஓட்டு எண்ணும் பணியில் 360 அலுவலர்கள்  முதற்கட்ட சீரற்ற தெரிவு முறையில் தேர்வு


ADDED : மே 25, 2024 05:17 AM

Google News

ADDED : மே 25, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் என360 அலுவலர்களுக்குமுதற்கட்ட சீரற்ற தெரிவு முறையில் தேர்வு நேற்று நடந்தது.

விருதுநகர் லோக்சபா தேர்தல் ஏப். 19ல் நடந்தது. அதை தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையமான விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோரை மூன்று கட்டமாக சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது.

நேற்று முதற்கட்டமாக கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடந்த தேர்வில் 120 ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 120 ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்கள், 120 நுண் பார்வையாளர்கள் என 360 ஓட்டு எண்ணும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு மே 27ல் நடத்தப்படும். தேர்தல் பொதுப் பார்வையாளர் வந்த பின் 2ம் கட்ட சீரற்ற தெரிவு முறையில் சட்டசபை தொகுதிக்கு தேர்வு செய்யும் பணி நடக்கும். 3ம் கட்ட சீரற்ற தெரிவு முறை தேர்வு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைத்து அதிகாலை 5:00 மணிக்கு பார்வையாளர் முன்னிலையில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மேசை வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us