ADDED : ஆக 26, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025 தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும், தொடர்புடைய ஓட்டுச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் செய்வது தொடர்பான பணிகளை அக். 18 வரை செய்ய உள்ளனர்.
பணிகள் முடிந்ததும் அக். 29 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.

