/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு
ADDED : ஆக 03, 2024 04:37 AM

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5: 30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் ஆயிரங்கண் பானை எடுத்தும், பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் கண், கை, கால், மலர், உப்பு, மிளகு நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக சாத்துாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இருக்கன்குடிக்கு இயக்கப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.