ADDED : ஜூலை 20, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சட்ட தேரோட்டம் நடந்தது.
சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா ஜூலை 11ல் கொடியேற்றத்துடன்துவங்கியது. தினமும் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்,தீபாராதனைகள் நடந்தது.
சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும்இரவு சுவாமி, அம்பாளுடன் ரிஷப, காமதேனு, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்ட தேரோட்டம்நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஜூலை 21ல் தபசு காட்சி நடைபெறும்.

