ADDED : மே 28, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 1995ம் ஆண்டு படித்த மாணவர்களின் சங்க கூட்டம், நிறுவனர் முகமது ஜலீல் தலைமையில் நடந்தது. 25 ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா, முதல்வர் சிவக்குமார் பேசினர். முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் பார்வதி வரவேற்றார். டீன்கள் ஷனாவாஸ், சிவரஞ்சனி, பேராசிரியர்கள் முரளிகண்ணன், லட்சுமணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தீபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.