ADDED : ஆக 09, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் படி குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அதை அரசு மானியமாக வழங்கும். இது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் ஆக. 14 மாலை 3:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.