ADDED : பிப் 27, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி; திருச்சுழி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், முதல்வர் எஸ்தர் தலைமையில் நடந்தது. பேராசிரியர் சீனிவாச பெருமாள் வரவேற்றார்.
திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். போதை பொருள் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர். பேராசிரியர் தீபா ராணி நன்றி கூறினார். பேராசிரியர்கள், போலீசார் உட்பட பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.