நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில், என்.சி.சி., சமூக நற்பணி மன்றம், செஞ்சுருள் சங்கம் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
கல்லூரி முதல்வர் உமாராணி துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் கீதா, வணிகவியல் கம்ப்யூட்டர் துறை தலைவர் சசிதாபேகம் , உதவி பேராசிரியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை நகர் புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கோமதி, அரசு மருத்துவனை ரத்த வங்கி டாக்டர் அண்ணாதுரை தலைமையில் செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியலட்சுமி, அமுதா செய்தனர்.