ADDED : ஆக 08, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆக. 1 முதல் ஆக. 7 வரை உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, சாத்துார் எஸ்.ஆர்., நாயுடு நினைவு கல்லுாரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதன் நிறைவு விழா விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதல்வர் (பொறுப்பு) லலிதா தலைமையில் நடந்தது.
இதில் நிலைய மருத்துவ அலுவலர் (பொறுப்பு) பாண்டிச்செல்வன், மருத்துவனை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், துணை கண்காணிப்பாளர் அன்புவேல், மருத்துவர்கள் சங்கீத், அரவிந்த்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.