நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 5 நாள் புதுமை வடிவமைப்பு, தொழில் முனைவு முகாம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர். ஸ்டார்ட் அப் நிறுவன தலைமை செயல் அலுவலர் ஷெரின் ஜாம் ஜோஸ், மத்திய கல்வி அமைச்சக ஆலோசகர் சவுரப் நிர்மலே, வாத்வானி அறக்கட்டளை பயிற்சியாளர்கள் சுஜாதா, நமீதா அகமது பேசினர். பல்கலை சுயதொழில் மைய துணை இயக்குனர் டெனி நன்றி கூறினார்.