ADDED : ஜூலை 20, 2026 08:11 PM
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தாயுமானவர் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது, கூட்டுறவு வங்கிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் கணினிப் பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். மதுரை ரோட்டில் உள்ள மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அலுவலகத்தின் முன்பிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள், சந்திப்புகள் வழியாக வலம் வந்து, இறுதியில் எம்.ஜி.ஆர்., சிலை கருமாதி மடம் அருகே முடிந்தது. இப்போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை பணியாளர்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
