ADDED : ஆக 09, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்கம் சார்பில் ஆண்டு முழுவதும் பணி வழங்குவது, அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் சீனிவாசகன், அரசு ஊழியர் சங்க செயலாளர் வைரவன், சி.பி.எஸ்., மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி பேசினர்.