sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

/

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு


ADDED : செப் 12, 2024 12:29 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.

விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என 1700 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட 9 வது குழியில் சுடுமண்ணால் ஆன கூம்பு வடிவ சிவப்பு நிற கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.

அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில் ''முன்னோர்கள் தொழிற்கூடங்கள் நடத்தி, வசித்ததற்கான சான்று அதிக அளவில் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள கிண்ணம் உணவு அருந்துவதற்கு அல்லது மூடியாக பயன்பட்டிருக்கலாம்.

மேலும் இந்தக் கிண்ணம் கூம்பு வடிவத்தில் சிவப்பு நிறத்தில் உள்ளது. எந்த பொருளாக இருந்தாலும் அதனை ரசனையாக பயன்படுத்தி உள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us