ADDED : மே 26, 2024 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பி.ஏ.சி ராமசாமி ராஜா நினைவு கபடி போட்டி தொடங்கியுள்ளது.
ஊர்க்காவல் படை மைதானத்தில் 3 நாள் நடைபெறும் பகல் நேர போட்டிகளை சம்சுதீன் துவக்கி வைத்தார். சிவகாசி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 32 ஆண்கள் அணியும் 8 பெண்கள் அணி என 340 பேர் கலந்து கொண்டனர்.
நாக்அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என மாநில அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் ஏ.பி.எஸ் ராஜா தெரிவித்துள்ளார்.