
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கேரளாவின் திருவனந்தபுரம் அருகே வர்க்கலையைச் சேர்ந்தவர் அனில்குமார் 49. இவர் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு 30 டன் சிமென்டை லாரியில் ஏற்றிக்கொண்டு விருதுநகர் -- சாத்துார் நான்கு வழிச்சாலையில் சென்றார்.
அப்போது எட்டூர்வட்டம் விலக்கு அருகே லாரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. லாரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தி போலீசார், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த விபத்தில் லாரி கருகி சிமெண்ட் மூடைகள் பாழானது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.