sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின் இணைப்பு டெபாசிட் தொகையை திரும்ப தர மின் வாரியம் தாமதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

/

மின் இணைப்பு டெபாசிட் தொகையை திரும்ப தர மின் வாரியம் தாமதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

மின் இணைப்பு டெபாசிட் தொகையை திரும்ப தர மின் வாரியம் தாமதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

மின் இணைப்பு டெபாசிட் தொகையை திரும்ப தர மின் வாரியம் தாமதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : ஆக 20, 2024 06:51 AM

Google News

ADDED : ஆக 20, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிலாபுரத்தில் நடத்தி வந்த நூற்பாலையை நஷ்டத்தால் மூடிவிட்டார்.

தன் நுாற்பாலை மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கவும், தொழில் துவங்கிய காலத்தில் செலுத்திய மின் இணைப்பு டெபாசிட் ரூ.1.50 லட்சத்தை திரும்பி தரவும் கோரி 2023 மார்ச் 1 ல் ராஜபாளையம் மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு செய்தார். மின்வாரிய அதிகாரிகள் டெபாசிட் தொகையை வழங்காமல் தாமதம் செய்தனர்.

இதனால் ராமசுப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 'டெபாசிட் ரூ.1.50 லட்சத்தை திரும்ப வழங்கவும், இழப்பீடாக ரூ. 25 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 5 ஆயிரத்தை ராஜபாளையம் மின் பகிர்மான கழக இயக்குதல் மற்றும் பேணுதல் உதவி பொறியாளர், ராஜபாளையம் ரூரல் செயல் உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர், விருதுநகர் மின் பகிர்மானம், உற்பத்தி கழக கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ ராமசுப்புக்கு வழங்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us