ADDED : ஆக 07, 2024 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி ஓடை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
இவருக்கு திருத்தங்கல் ரோட்டில் அய்யனார் பேக்கரி உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் பேக்கரியில் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேக்கரிக்கு தேவையான சமையல் பொருட்கள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.