ADDED : மார் 25, 2024 06:31 AM
வத்திராயிருப்பு, : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் யாரும் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12: 00 மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

