sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழிலாளி கொலை இருவரிடம் விசாரணை

/

தொழிலாளி கொலை இருவரிடம் விசாரணை

தொழிலாளி கொலை இருவரிடம் விசாரணை

தொழிலாளி கொலை இருவரிடம் விசாரணை


ADDED : ஜூலை 03, 2024 01:59 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதுாரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி கான்கிரேஸ் புயான், 43, என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வனப்பாண்டி உட்பட இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகாசி அருகே நாரணாபுரம் புதுாரில் அனுப்பன்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயனின் சிமென்ட் செங்கல் தயாரிக்கும் கம்பெனியில், பீஹார் மாநில தொழிலாளர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இங்கு, கயா மாவட்டம் ராணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கான்கிரேஸ் புயானும் பணியாற்றினார்.

சம்பவத்தன்று, கான்கிரேஸ் புயான் தன் நண்பர்களுடன் இரவு அதே பகுதியில் மது அருந்த சென்றார். பின், அனைவரும் கம்பெனிக்கு திரும்பிய நிலையில் கான்கிரேஸ் புயான் மட்டும் வரவில்லை. அவர் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் நாரணாபுரம் புதுாரைச் சேர்ந்த வனப்பாண்டி உள்ளிட்ட இருவரிடம் விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'சம்பவ இடத்தில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வனப்பாண்டி உள்ளிட்ட சிலர் கான்கிரேஸ் புயானிடம் தகராறு செய்தது தெரிந்தது. அவர்களிடம் விசாரித்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us