sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

l ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் சிரமம்; l வளைவுகளில் விபத்துக்களில் சிக்கும் அபாயம்

/

l ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் சிரமம்; l வளைவுகளில் விபத்துக்களில் சிக்கும் அபாயம்

l ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் சிரமம்; l வளைவுகளில் விபத்துக்களில் சிக்கும் அபாயம்

l ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் சிரமம்; l வளைவுகளில் விபத்துக்களில் சிக்கும் அபாயம்


ADDED : செப் 16, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநில நெடுஞ்சாலை, கிராமப்புறங்களுக்கு செல்லும் உள்ளாட்சி ரோடுகள் என பெரும்பாலான ரோடுகள் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்குதான் உள்ளது.

குண்டும் குழியுமாகி சரிவர பராமரிப்பு பணிகள் செய்வது கிடையாது. பெரும்பாலான கிராமப்புற, முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இவை ரோடுகளை மறைத்து வளர்ந்து நிற்பதுடன், வாகனங்கள் செல்லும்போது உரசி சேதப்படுத்துகின்றன. அது மட்டுமல்ல பஸ்சில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் பயணிகளின் மேல் பட்டு கண்களை பதம் பார்க்கிறது. வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ரோடுகள் வளைந்து, நெளிந்து கொண்டை ஊசி வளைவுகள் போல் உள்ளன.

அவ்வாறான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் மறைத்து, எதிரே வரும் வாகனங்கள் தெரியாது. அருகில் வரும்போது இரு வாகன ஓட்டிகள் பதட்டத்தில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

காற்று அடிக்கும் காலங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேல மரங்களுக்குள் திருட்டு கும்பல்கள் மறைந்து வழிப்பறி செய்ய வசதியாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் வேகமாக வளர்ந்து ரோடுகளை மறைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்விஷயத்தில் ரோடு பணி முடிந்தவுடன் கடமை முடிந்து விட்டதாக ஒப்பந்ததாரர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர். போதிய பராமரிப்பு பணிகளை செய்வது கிடையாது. கிராமப்புற ரோடுகளில் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறையினர், உள்ளாட்சித் துறை சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.






      Dinamalar
      Follow us