ADDED : ஜூன் 23, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு துாய்மை பணியாளர்களுக்காக சட்ட விழிப்புணர்வு மாநில மாநாடு தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்க மாநில தலைவர் அன்னமயில் தலைமையில் நடந்தது.
இதில் மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், முத்தையா, சசிக்குமார், மதிப்பிரியா, முத்துக்குமார், ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணை பொதுச் செயலாளர் சுகந்தி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கறிஞர் கருணாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.