/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து பயிற்சி முடிக்காத போர்மேன்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
/
3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து பயிற்சி முடிக்காத போர்மேன்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து பயிற்சி முடிக்காத போர்மேன்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து பயிற்சி முடிக்காத போர்மேன்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 11, 2024 02:37 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை முடிக்காத போர்மேன்கள், கண்காணிப்பாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது தெரிந்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் உள்குத்தகை, அதிக உற்பத்தி பொருட்களை இருப்பு வைத்தது, பதிவேடுகள் பராமரிக்காதது, அதிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்ட 82 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என ஒரு மாத கால பயிற்சி சிவகாசி பட்டாசு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கடிதத்தின் அடிப்படையில் வருபவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் அவர்கள் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும்.
மூன்றாம் முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் அவர்கள் ரூ.10000 அபராதம் செலுத்த வேண்டும். நான்காம் முறை கடிதம் எழுதியும் பயிற்சிக்கு வரத்தவறினால் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்து பட்டாசு ஆலை போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் இந்த ஒரு வார கால பயிற்சியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கால வரைமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்கவும் உயிர் சேதங்கள் இல்லாமல் உற்பத்தியை செய்யவும் இந்த பயிற்சி முக்கியமானதாக இருக்கும். பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் செயல்பட வேண்டும்.
பயிற்சி பெறாத தொழிலாளர்களே அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு ஒரு காரணமாகவும் இருப்பதால் நிர்ணயித்த காலகெடுவுக்குள் பயிற்சியை முடிக்காத போர்மேன்கள், கண்காணிப்பாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் உற்பத்தி நிறுத்தம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.