sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துாரில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

/

ஸ்ரீவில்லிபுத்துாரில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

ஸ்ரீவில்லிபுத்துாரில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

ஸ்ரீவில்லிபுத்துாரில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை


ADDED : பிப் 23, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஓய்வு பெற்ற மில் மேனேஜர் குப்புசாமி வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், கதவுகளை உடைத்து வீட்டிற்குள் பீரோக்களை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரத்தை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் கிருஷ்ணா நகர் தெற்கு கடைசி தெருவில் வசிப்பவர் குப்புசாமி 57, ஓய்வு பெற்ற மில் மேனேஜர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் கோவையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.

நேற்று அதிகாலை 2:30 மணிக்கு இவரது வீட்டிற்குள் புகுந்த டவுசர், முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் வாசலில் கேமராக்களை உடைத்தும், வீட்டு கதவை உடைத்தும் உள்ளே சென்று, பெட்ரூமில் பீரோவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளையும், ரூ. 80 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடய அறிவியல் பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடியதில் வீட்டிலிருந்து அருகிலுள்ள வயல் பகுதிக்கு சென்று விட்டு அடுத்த தெருவில் உள்ள ஆளில்லாத 2 வீடுகளுக்கும் சென்றது. அப்போதுதான் அந்த வீடுகளிலும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்தது தெரிய வந்தது.

சம்பவ வீட்டை பார்வையிட்ட பின்பு விருதுநகர் எஸ்.பி. கண்ணன் கூறியதாவது; நகை திருட்டு சம்பவத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

இதே வீட்டில் 2019ல் 19 பவுன் நகைகள் கொள்ளை போன நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே வீட்டில் கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.






      Dinamalar
      Follow us