/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன விபரங்களுடன் அலைபேசி எண் அவசியம்
/
வாகன விபரங்களுடன் அலைபேசி எண் அவசியம்
ADDED : மார் 02, 2025 05:56 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அனைத்து வாகனங்களுக்கும் வாகன விபரங்களுடன் வாகன உரிமையாளர்களின் அலைபேசி எண்ணை வாகனப் பதிவுச் சான்றுடன் இணைப்பது போக்குவரத்துத் துறையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விபரத்துடன் தங்களது அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தினை போக்குவரத்துத்துறை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும், தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ள அலைபேசி எண்ணை தங்களது பெயரில் உள்ள வாகனங்களுடன் இணைக்கவும் வேண்டும்.
மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி, வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் நகலுடன் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண் விபரத்தை கொடுத்து வாகன எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம், என்றார்.