ADDED : ஜூலை 31, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, :   சிவகாசி காக்கிவாடன்பட்டி  கே.ஆர்.பி. கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய கார்கில் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி பேசினார். தமிழ்த்துறை மாணவர்களின் போரில்லா உலகம் படைப்போம் என்னும் தலைப்பில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இந்திய ராணுவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்டுரை, பேச்சு,  ஓவிய போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு  பரிசு,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

