sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : மே 04, 2024 04:35 AM

Google News

ADDED : மே 04, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்கொலை

சாத்துார்: சாத்துார் என்.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் ஜெயசிங்கராஜ், 48. கொத்தனர். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி

சாத்துார்: சாத்துார் அருகே சின்னத்தம்பியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 50. என்.வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள வள்ளி மில்லில் பணிபுரிந்து வந்தார். மே 2 மாலை பணி முடிந்து டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) ஊர் திரும்பினார். என்.வெங்கடேஸ்வரபுரம் விலக்கு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். கோவில்பட்டி நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியதில் முத்துப்பாண்டி பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கீழ்பாண்டவர் மங்களத்தை சேர்ந்தகார் டிரைவர் மதன் மீது சாத்துார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தகராறு: 5 பேர் மீது வழக்கு

காரியாபட்டி: காரியாபட்டி கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கமாரி, காசிபாண்டியன். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினரும் தகாத வார்த்தையில் பேசி தாக்கி கொண்டனர். மீனா, சத்தியமூர்த்தி, காசி பாண்டியன், சதீஷ்குமார் மீதும், தங்கமாரி மீதும் ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பட்டாசு திரி பறிமுதல்

விருதுநகர்: திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த பாண்டித்துரை 35. இவர் எவ்வித அரசு உரிமமும், அனுமதியும் பெறாமல் 2 குரோஸ் மிஷின் திரிகளை ஓ.முத்துலாபுரத்தில்உள்ள அவருக்கு சொந்தமான ஷெட்டில் விற்பனைக்கு வைத்திருந்தார். பறிமுதல் செய்து ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிணற்றில் இளைஞர் உடல்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் ராம் 21. அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜ் என்பவருக்கு சொந்தமான 200 ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யனார் கோயில் அருகே குத்தகைக்கு எடுத்த முருகனின் காட்டில் ஆட்டுக்கிடை போட்டு தங்கி இருந்துள்ளனர். கிடையில் இருந்த பிரசாத் ஆடுகளை அடைத்துவிட்டு கிணற்றில் சென்று பார்த்தபோது கணேஷ்ராம் இறந்து கிடந்துள்ளார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us