ADDED : ஏப் 25, 2024 05:16 AM
அரசு பஸ் நடத்துனர் பலி
சிவகாசி: தாராபுரம் அருகே தாளக்கரையைச் சேர்ந்தவர் முருகேசன் 58. திருப்பூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் டிரைவர் பரமன் 47. இருவரும் திருப்பூரில் இருந்து அரசு பஸ்சை ஓட்டி சிவகாசிக்கு நேற்று இரவு 9:30 மணிக்கு வந்தனர். சிவகாசி பஸ்டாண்டில் பயணிகளை இறக்கிவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ் எடுப்பதற்காக வந்தனர். புழுக்கமாக இருந்ததால் பரமன் பஸ்சிற்கு வெளியே சற்று நேரம் ஓய்வு எடுத்தார். முருகேசன் பஸ்சிற்குள் ஓய்வு எடுப்பதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து பஸ் எடுப்பதற்காக பரமன் உள்ளே சென்று பார்க்கையில் முருகேசன் படுத்த நிலையில் இறந்து கிடந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ------
இளம் பெண் தற்கொலை
சிவகாசி: மீனம்பட்டி திடீர் நகரை சேர்ந்தவர் கருப்பாயி 21. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அஸ்வின் வேறொரு பெண்ணுடன் அலைபேசியில் பேசி வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கருப்பாயி தனது தாயார் வீட்டிற்கு வந்து விட்டார். தொடர்ந்து கருப்பாயி மீண்டும் தனது கணவன் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் அலைபேசியில் பேசி வந்தார். மனமுடைந்த கருப்பாயி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பீரோவிலிருந்து பணம் திருட்டு
விருதுநகர்: பாவாலி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 36. இவரிடம் ஏப். 23 ல் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. 48 ஆயிரம் பணம் திருடு போய்விட்டதாக தாய் கூறியுள்ளார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.---
-----

