sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

/

விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி


ADDED : பிப் 24, 2025 04:36 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம் : தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து மதுரையில் தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறிகளும் இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1500 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலையில் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் காலாவதியாகி கூலி உயர்வு வழங்கவில்லை.இதனை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கத்தினரும் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை செவ்வாய்க்கிழமை மதுரையில் வைத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us