ADDED : ஜூலை 04, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
நேற்று காலை 6:15 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.