ADDED : ஏப் 07, 2024 06:09 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : மதுரை மாவட்டம் திருமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சட்டசபை தொகுதிக்குள் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கினார். பின் அங்குள்ள பி.கே.என்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியை நேரில் ஆய்வு செய்தார். இதில் ஓட்டுச்சாவடியில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அறிவுறுத்தினார்.
