ADDED : மார் 05, 2025 06:07 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் அன்னமயில் தலைமை வகித்தார். பெசதுச்செயலாளர் நாகலட்சுமி, பொருளாளர் பாலமுருகன், துணை தலைவர் குருநாதன் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு பணி ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்குவது, ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்களை கடை நிலை அரசு ஊழியராக அங்கீகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
