sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/

பள்ளி, கல்லுாரி செய்திகள்/


ADDED : ஜூன் 29, 2024 04:59 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருத்தரங்கு


விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் சேவை பிரிவு, மாவட்ட சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது. மாணவர் சேவை பிரிவு டீன் நிர்மல்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சாரதி தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.ஐ.,க்கள் வகுலாதேவி, புகழேந்தி, தங்கப்பாண்டி பேசினர். புள்ளியியல் துறை உதவியாளர் விஜயலட்சுமி போதை பொருளால் உடல் நலம் பாதிப்பு பற்றி பேசினார். ஆராய்ச்சி டீன் ஜெயகுமரன் பேசினார். மாணவர்கள் போதைக்கு எதிரானஉறுதிமொழி எடுத்து கொண்டனர். பேராசிரியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி


விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் புதிய மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 5 நாள்கள் நடந்தது. கல்லுாரி பேரவை தலைவர் அமுதா வரவேற்றார். பல அமைப்புகளின் பொறுப்பாசிரியர்கள் அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினர். யோகா, இயற்கை மருத்துவக் கல்லுாரி மாணவி வைசாலி பேசினார்.

2, 4, 5ம் நாள் கருத்தரங்குகளில் தொடர்பு திறன், உலகளாவிய மனித திப்புகள் குறித்து ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பேசினர். 3ம் நாள் நிகழ்வில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியை தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் வழங்கியது.






      Dinamalar
      Follow us