/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரதம மந்திரி திட்டத்தில் மானியத்தில் சோலார் பேனல்
/
பிரதம மந்திரி திட்டத்தில் மானியத்தில் சோலார் பேனல்
பிரதம மந்திரி திட்டத்தில் மானியத்தில் சோலார் பேனல்
பிரதம மந்திரி திட்டத்தில் மானியத்தில் சோலார் பேனல்
ADDED : ஆக 21, 2024 06:43 AM
விருதுநகர் : மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்தின் கீழ் மானிய விலையில் சோலார் பேனல் பெற அனைத்து வீட்டு மின்இணைப்பு உரிமையாளர்கள் கூடுதல் ஆவணங்கள் ரசீது மட்டும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இதில் அலைபேசி செயலி PM Surya-Ghar, QRT PM Suryaghar, www.pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து விரும்பிய விற்பனையாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் சோலார் பேனல் பொருத்த ரூ.30 ஆயிரம் மானியம், 2 கிலோ வாட் பேனல் பொருத்த ரூ. 60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் பேனல் பொருத்த ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இதற்காக வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படுகிறது.
மானியம் நுகர்வோர் வங்கி கணக்கிற்கு சோலார் பேனல் திட்ட பணிகள் முடிந்த 7 முதல் 30 நாள்களில் செலுத்தப்படும்.
ஒரு கிலோ வாட் பேனல் ஒரு நாளைக்கு 4 முதல் 5 யூனிட்கள் வரை மின் உற்பத்தி செய்வதால் நுகர்வோர்கள் முதலீட்டை குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

