/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாரடைப்பால் மகன் மரணம் அதிர்ச்சியில் தாய் இறப்பு
/
மாரடைப்பால் மகன் மரணம் அதிர்ச்சியில் தாய் இறப்பு
ADDED : மே 24, 2024 10:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார், 44, இவர் நாமக்கல்லில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்தார். நேற்று அங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்கு லாரி ஓட்டி கொண்டு சித்துார் அருகே சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இதுகுறித்து சித்துார் போலீசார் ஸ்ரீவில்லிபுத்துார் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் கிருஷ்ணன்கோவில் தெருவிலுள்ள சரவணகுமார் வீட்டை தேடி பிடித்து நேரில் தெரிவித்தனர். சரவணகுமாரின் மனைவி, உறவினர்கள் சித்துார் சென்றனர்.
மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் லட்சுமியம்மாள் அதிர்ச்சியில் பேச்சு, மூச்சின்றி இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகன் இறந்த செய்தி கேட்டு தாயும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.