sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சூதுபவள மணி கண்டெடுப்பு

/

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சூதுபவள மணி கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சூதுபவள மணி கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சூதுபவள மணி கண்டெடுப்பு


ADDED : ஆக 23, 2024 02:40 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில், மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி என, 1,500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், காளையின் உருவம் செதுக்கப்பட்ட சூதுபவள மணி கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

விஜய கரிசல்குளம் அகழாய்வில் கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில், குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது, மோதிரத்தில் பதிக்கும் வகையில் உள்ளது. செதுக்கு முறையில், சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில், தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பு.

கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி பட்டணம் அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us