ADDED : மே 06, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : ஏழாயிரம் பண்ணை யில் மாமனாரை வெட்டிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏழாயிரம்பண்ணை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 48. இவர் மகள் பொன் லட்சுமியை கண்மாய் சூரங்குடியை சேர்ந்த சரவணக்குமார் திருமணம் செய்து கொடுத்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.
நேற்று முன்தினம் மாலை 4:15 மணிக்கு சரவணக்குமார், குமார் என்பவருடன் ஏழாயிரம்பண்ணை வந்து மாமனார் சுரேஷ்குமாரை மாப்பிள்ளை சரவணகுமார் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
சுரேஷ்குமார் சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.