ADDED : மே 24, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
மே 14ல் கொடியேற்றமாகி மே 21ல் பொங்கல், நேற்று முன்தினம் அக்னி சட்டி நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. விழாவின் இறுதிநாளான நேற்று தேரோட்டம் மாலை 5:00 மணிக்கு நடந்தது. மெயின் பஜார், கிழக்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வந்து தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்தனர்.