/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு
/
டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு
டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு
டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 10, 2024 06:33 AM
அருப்புக்கோட்டை : மதுரை -- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் கூட்ட நெரிசல் இருப்பதால் கூடுதல் கவுண்டர்களை திறக்க விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை -- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக செல்லும் 4 வழி சாலையில், எலியார் பத்தியில் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்) உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு கட்டணம் செலுத்தி வந்து செல்கின்றன.
போக, வர உள்ள 2 ரோடுகளில் 4 கவுண்டர்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுவதால் வாகனங்கள் காத்திருந்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது.
மேலும், இந்த வழியாக செல்லும் பஸ்கள் காத்திருந்து செல்வதால், நேரத்திற்கு பஸ் செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க 4 கவுன்டர்களும் செயல்பட நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருதுநகர் மாவட்டம் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட கலெக்டர், நகாய் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

