sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு

/

டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு

டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு

டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு; கூடுதல் கவுன்டர்களை திறக்க எதிர்பார்ப்பு


ADDED : ஆக 10, 2024 06:33 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : மதுரை -- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் கூட்ட நெரிசல் இருப்பதால் கூடுதல் கவுண்டர்களை திறக்க விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை -- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக செல்லும் 4 வழி சாலையில், எலியார் பத்தியில் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்) உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு கட்டணம் செலுத்தி வந்து செல்கின்றன.

போக, வர உள்ள 2 ரோடுகளில் 4 கவுண்டர்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுவதால் வாகனங்கள் காத்திருந்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது.

மேலும், இந்த வழியாக செல்லும் பஸ்கள் காத்திருந்து செல்வதால், நேரத்திற்கு பஸ் செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க 4 கவுன்டர்களும் செயல்பட நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருதுநகர் மாவட்டம் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட கலெக்டர், நகாய் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.






      Dinamalar
      Follow us