/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் உரிமைத் தொகை; வதந்தியால் படையெடுப்பு
/
மகளிர் உரிமைத் தொகை; வதந்தியால் படையெடுப்பு
ADDED : ஆக 20, 2024 06:53 AM
விருதுநகர் : மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற கலெக்டர் அலுவலகத்தில் ஆக.17, 19, 20 நாட்களில் மனுக்களை கொடுக்கவும் என்ற வாட்ஸ் ஆப் செய்தியை நம்பி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெண்கள் கூட்டமாக குவிந்தனர்.
தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் கலெக்டர் அலுவலகங்களில் ஆக. 17, 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கும் முகாம்களில் ஆவணம் நகல், மனுக்களை கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொய்யான செய்தி பரவியது.
இதை நம்பி ஆக. 17ல் விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் முகாமிட்டனர். இது போன்ற முகாம்கள் கலெக்டர் அலுவலகத்தில் எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் நேற்றும் மகளிர் உரிமைத் தொகை வதந்தியை நம்பி மனுக்களை கொடுப்பதற்காக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பெண்கள் வந்து குவிந்தனர்.

