நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சூரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,54, இவர் தனது நண்பர் ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அய்வராஜ், 47, உடன், நேற்று முன்தினம் பைக்கில் விருதுநகரில் தன் நண்பர் மகள் திருமணத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
பைக்கை அய்வராஜ் ஓட்ட, பின்னால் ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். அருப்புக்கோட்டை - -விருதுநகர் ரோடு நமச்சிவாயபுரம் விலக்கு அருகே, பைக் நிலை தடுமாறியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அய்வராஜ் இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

