ADDED : பிப் 16, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டூவீலரில் சென்ற பாஸ்கரன் 28, சுதாகர் 22, அரசு பஸ் மோதியதில் பலியாயினர்.
திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி வேடநத்தத்தை சேர்ந்தவர்கள் பாஸ்கரன், சுதாகர். திருச்சுழியில் இருந்து பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) அருப்புக்கோட்டைக்கு சென்ற போது, திருச்சுழி ரோடு அருகில் அரசு பஸ்சை முந்திச் சென்ற னர். எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் இருவரும் ரோட்டில் விழுந்தனர். அரசு பஸ் இருவர் மீதும் ஏறியதில் பலியாயினர்.