sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2025 ஆண்டு காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது சங்க செயலாளர் தகவல்

/

2025 ஆண்டு காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது சங்க செயலாளர் தகவல்

2025 ஆண்டு காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது சங்க செயலாளர் தகவல்

2025 ஆண்டு காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது சங்க செயலாளர் தகவல்


ADDED : அக் 13, 2024 07:30 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: ''மின் கட்டணம், வேலையாட்கள் கூலி, ஆர்ட் பேப்பர் எனப்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால் 2025 ஆண்டுக்கான காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது,'' என, சிவகாசியில் தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் தெரிவித்தார்.

சிவகாசியில் சிறிதும், பெரிதுமாக 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு இங்குள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டுக்கான ஆல்பத்தை வெளியிடுவர். புதிய ஆல்பங்களை தங்களது ஏஜன்ட்கள், வாடிக்கையாளர்கள், மக்களுக்கும் அறிமுகம் செய்வர். இதன் பின் வரும் ஆர்டர்களுக்கு புதிய ஆண்டுக்கான மாதாந்திர, தினசரி, டேபிள் காலண்டர் தயாரிக்கும் பணிகள் துவங்கும்.

2025 ஆண்டுக்கான காலண்டருக்கு 2024 நவ., வரை ஆர்டர் பெற்று, டிச.,ல் காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கும். ரூ.15 முதல் ரூ. 2500 வரை காலண்டர் பல்வேறு விலைகளில் வித விதமாக கிடைக்கிறது. இந்தாண்டு விலைவாசி கட்டுக்குள் இருந்தாலும் மின் கட்டணம், வேலையாட்களின் கூலி உயர்வு காரணங்களால் காலண்டர் 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறியதாவது: மின் கட்டணம், வேலையாட்கள் கூலி, மூலப்பொருட்கள் விலை உயர்வால் காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது வரை உற்பத்தி நிறுவனங்களால் 50 சதவீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் முழுமையான ஆர்டர்கள் கிடைக்கும். உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் ஐந்து சதவீதம் காலாண்டர் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us