/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்டோக்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது
/
ஆட்டோக்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது
ADDED : நவ 07, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கீழப்பட்டி தெருவை சேர்ந்தவர் சிவா 46, ஆட்டோ டிரைவர். இவரும் இவரது நண்பர்கள் சுந்தர மகாலிங்கம், ஐயப்பன், மாரிமுத்து ஆகியோர் கைகாட்டி கோயில் பஜார் ஆட்டோ ஸ்டாண்டில் நவ.4ம் தேதி இரவு தங்களது ஆட்டோக்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
மறுநாள் காலையில் வந்து தங்களது ஆட்டோக்களை ஸ்டார்ட் செய்யும் போது ஆட்டோவில் இருந்த பேட்டரிகள் திருடு போனது தெரியவந்தது.
குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையில் செங்குளத்தைச் சேர்ந்த மதன்குமார் 20, அவரது தம்பி கணேஷ் 18, உறவினரான 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து பேட்டரிகளை மீட்டனர்.

