/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் 3 யுடியூபர்கள் உட்பட 4 பேர் கைது
/
சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் 3 யுடியூபர்கள் உட்பட 4 பேர் கைது
சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் 3 யுடியூபர்கள் உட்பட 4 பேர் கைது
சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் 3 யுடியூபர்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜன 30, 2025 02:42 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்த புகாரில் யுடியூபர்கள் திவ்யா, கீழக்கரை கார்த்திக், சித்ரா, வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ஆனந்த ராமன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கார், அலைபேசியை பறிமுதல் செய்தனர்.
கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் திவ்யா கள்ளச்சி என்ற யுடியூப் சேனல் நடத்தி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா 30, ஈரோட்டைச் சேர்ந்த கீழக்கரைகார்த்திக் என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் கீழக்கரை கார்த்திக் 30, என்பவரும் சேர்ந்துவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்துஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில்சித்ரா புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய வங்கி கணக்கைஹேக் செய்து ரூ.2.5 லட்சத்தை திவ்யா எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். அதில் யுடியூபர்கள் திவ்யா , கீழக்கரை கார்த்திக் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரில் திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோரிடம் ஏ.டி. எஸ். பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி விசாரித்தனர். விசாரணையில் சித்ரா சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.
இதனையடுத்து யுடியூபர்கள் 3 பேர் மீதும், ஆபாச ரீல்ஸ் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்தஆனந்த ராமன் 24, என்பவர் மீதும் போக்சோ சட்டத்தின் 6 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நால்வரையும் கைது செய்தனர். மேலும் சித்ராவின் அலைபேசி, காரையும் பறிமுதல் செய்தனர். கைதான நால்வரும் ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்.12 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார்.

