/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மன நல மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மயக்கம்
/
மன நல மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மயக்கம்
ADDED : ஆக 08, 2025 02:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் மன நல சிகிச்சைக்கான மாத்திரை சாப்பிட்டதால் மயங்கியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், நேற்று தன் தாயார் மனநல சிகிச்சைக்கு சாப்பிடும் மாத்திரையை பள்ளிக்கு கொண்டு வந்தார். மதியம் சாப்பாடு முடிந்தவுடன் தானும் சாப்பிட்டு தன்னுடைய சக நண்பர்கள் 3 பேருக்கும் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் 4 மாணவர்களும் லேசான மயக்கம் ஏற்பட்டு சோர்வடைந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகர் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.