sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

176 மையங்களில் குரூப் 4 தேர்வு 49 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

/

176 மையங்களில் குரூப் 4 தேர்வு 49 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

176 மையங்களில் குரூப் 4 தேர்வு 49 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

176 மையங்களில் குரூப் 4 தேர்வு 49 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்


ADDED : ஜூலை 12, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்று குரூப் 4 தேர்வு 176 மையங்களில் 49 ஆயிரத்து 454 பேர் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும்குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 12) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு பணியில் சேர துடிப்போருக்கு குரூப் 4 தேர்வு சிறந்த நுழைவு வாயிலாக உள்ளது.

இந்தாண்டு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பல ஆண்டுகளாக தயாரானவர்கள், மும்முரம் காட்டினர். இந்த தேர்வை பொறுத்தமட்டில் கல்லுாரி மாணவர்களில் இருந்து 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள், 40 வயது பெண்கள் வரை தேர்வெழுதுவர்.

மாவட்டத்தில் 176 மையங்களில் 49 ஆயிரத்து 454 பேர் எழுதுகின்றனர். 34நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் கண்காணிக்கின்றன. 10 பறக்கும் படைகள், 20 வீடியோகிராபர்கள் குழுக்கள் முழுநேர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். தேர்வை முன்னிட்டு காலை நேரங்களில் சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் தேர்வு நேரத்திற்கு முன்னதாக செல்ல மாவட்ட நிர்வாகத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us