/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேலையூர் ஊராட்சிக்கு வந்த பேட்டரி குப்பை வாகனம்
/
மேலையூர் ஊராட்சிக்கு வந்த பேட்டரி குப்பை வாகனம்
ADDED : அக் 18, 2024 04:49 AM
திருச்சுழி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக 2 ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரம், மேலையூர் ஊராட்சிகளுக்கு குப்பையை அள்ள பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. 2 வாகனங்கள் வாங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன. வந்து 2 ஆண்டுகள் ஆகியும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் காட்சி பொருளாக நின்றது.
இதுகுறித்து அக்.13ல், தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்தது. இதையடுத்து, வாகனங்களுக்கு பேட்டரிகள் பொருத்தி உடனடியாக 2 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.